உழவுக்கும் வீட்டுக்கும்
முப்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட இருந்த முறைகள் ஒன்று கூட இப்போது இருக்கும் உழவர்களிடம் இல்லை... வீட்டுக் கூரையில் : 1. சுரை வீட்டை சுற்றிலும் : 1. கொடி அவரை 2. பீர்க்கன் 3. புடலை 4. மஞ்சள் பூசணி 5. கீரைகள் 6. காய்கறிகள் கால்நடைகள் : 1. நெய் மற்றும் மோருக்காக - பசுக்கள் (குறைந்தது ஒன்று கறவையில்), 2. உழவுக்கும் வண்டிக்கு கமலை ஏற்றத்திற்கும் என - பல ஜோடி காளை மாடுகள் , 3. முட்டைக்கும் இறைச்சிக்கு என கோழிகள் ஆடுகள் . வயக்காட்டில் : 1. சோளம் 2. கம்பு 3. ராகி 4. சிகப்பு நெல் 5. தக்காளி, 6. அவரை 7. மிளகாய், 8. கத்திரி 9. எள், 10.கடலை 11. வெண்டை வரப்பில் : 1. அகத்தி 2. ஆமணக்கு 3. துவரை ஊடுபயிர் : 1. பச்சைப்பயறு 2. உளுந்து 3. தட்டை 4. கொண்டைக்கடலை 6. கொத்தமல்லி உயிர் வேலியில் : 1. பிரண்டை 2. கோவை 3. நுரை பீர்க்கன் 4. சுண்டை 5. மூலிகை செடிகள் கொடிகள் உரக்குழி : கால்நடை சாணத்தை எடுத்து ஒரு குழியில் போட்டு மக்குவதற்க்கு மாட்டு கோமியத்தை அதில் ஊற்றுவார்கள். தினமும் இந்த சாணம் அள்ளுவது ஒரு வேலையாக காலையிலும் மாலையிலும் செய்ய வேண்டியது இருக்கும். இது நன்றாக மக்கி நல்ல அடி உரமாக இருக்கும்....